அட்டாளைச்சேனை கல்விக் கல்லுாரியில் நேர்முகப் பரீட்சை




(எம்.ஜே.எம்.சஜீத்)
கல்வி கல்லூரிகளில் புதிய ஆசிரியர்களை உள்வாங்கல்

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்விக் கல்லூரிகளில் கற்பித்தல் டிப்ளோமா பாடநெறிக்கான இரு குழுக்களையும் ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்காக கணிதம் மற்றும் இஸ்லாம் ஆகிய பாடங்களுக்கான நேர்முகப்பரீட்சை 2019 ஜூன் மாதம் 17ம் திகதியிலிருந்து அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் இடம் பெறவுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு கடிதங்கள் பதிவுத் தபால் மூலம் உரிய விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இம்முறை அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரிக்கு இரண்டு தொகுதிகளிலும் இருந்து மொத்தமாக 05 பாடநெறிக்காக 350 ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தெரிவித்தார்.