தானம் வழங்கும் நிகழ்வு


(க.கிஷாந்தன்)
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விகாரைகளில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி மலையகத்தில் பல பாகங்களிலும் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அட்டனில் அட்டன் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ் கீரிம் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, அட்டன் ஞாயிறு சந்தை தொகுதியின் ஏற்பாட்டில் பிரைட் ரைஸ் தானம் வழங்கியதோடு, அட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பிஸ்கட் வழங்கும் நிகழ்வு புகையிரதத்தில் பயணித்த பயணிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இந்த நிகழ்வுகளில் சர்வ மதத்தலைவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினர்.