தர்மச் சக்கர ஆடைக்காக சிறை சென்ற பெண் மசாஹிமா மீண்டார்




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்
தர்மச் சக்கர ஆடை அணிந்ததற்காக சிவைக்கப்பட்ட ஹசலக மசாஹிமா நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டார்.இவருக்காக வாதாடிய சட்டத்தரணிகள் சறூக் மற்றும் நுஸ்ரா சறூக் ஆகிய இருவருக்கும் எமது வாழ்து்க்கள் உரித்தாகட்டும்.

தர்மச் சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்து புத்த மதத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யதன் ஊடாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயற்­சித்­த­தாக குறித்த பெண் மீது ஹஸலக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்­தி­ருந்­தனர். இந் நிலையில் குறித்த வழக்கு நேற்­றைய தினம் மஹி­யங்­கனை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே இப் பெண்ணை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.
அத்­துடன் பொலி­சாரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க குறித்த ஆடை­யை பௌத்த சமய ஆணை­யாளர் திணைக்­க­ளத்­திற்கும் தர நிர்­ணய சபைக்கும் அறிக்­கைக்­காக அனுப்பி வைக்­கவும் நீதி­மன்றம்  அனு­ம­தி­ய­ளித்­தது.
இதே­வேளை குறிப்­பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்­ன­மா­கிய தர்­ம­சக்­கரம் அல்ல, அது கப்­பலின் சுக்கான்  ஆகும் என இப் பெண் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­களால் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­துடன் பிணை வழங்­கு­மாறும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.
எனினும்  இவ்­வ­ழக்­கா­னது ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் பொலி­சா­ரினால் தொடுக்­கப்­பட்­டி­ருப்­பதால் பிணை வழங்கும் அதி­காரம் தனக்கு இல்லை எனக் கூறி சட்­டத்­த­ர­ணி­களின் பிணை கோரிக்­கையை நீதிவான் நிராகரித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சட்டத்தரணிகளான சறூக் மற்றும் நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.