#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்
தர்மச் சக்கர ஆடை அணிந்ததற்காக சிவைக்கப்பட்ட ஹசலக மசாஹிமா நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டார்.இவருக்காக வாதாடிய சட்டத்தரணிகள் சறூக் மற்றும் நுஸ்ரா சறூக் ஆகிய இருவருக்கும் எமது வாழ்து்க்கள் உரித்தாகட்டும்.
தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதன் ஊடாக இரு சமூகங்களுக்கிடையில் இன முறுகலை ஏற்படுத்த முயற்சித்ததாக குறித்த பெண் மீது ஹஸலக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந் நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இப் பெண்ணை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த ஆடையை பௌத்த சமய ஆணையாளர் திணைக்களத்திற்கும் தர நிர்ணய சபைக்கும் அறிக்கைக்காக அனுப்பி வைக்கவும் நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதேவேளை குறிப்பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்னமாகிய தர்மசக்கரம் அல்ல, அது கப்பலின் சுக்கான் ஆகும் என இப் பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் பிணை வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் இவ்வழக்கானது ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் பொலிசாரினால் தொடுக்கப்பட்டிருப்பதால் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனக் கூறி சட்டத்தரணிகளின் பிணை கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சட்டத்தரணிகளான சறூக் மற்றும் நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment