கல்முனை மன்றில்,சஹ்ரானின் மனைவி


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்,  சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிராதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தினார்.
சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டப் போதே, இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.