40 வருடங்கள் பூர்த்தி


ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (01),  40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
1979இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையானது கட்டுநாயக்கவிலிருந்து பெங்கொக் வரையில் விமான சேவைகளை வழங்கியிருந்தது.
அத்துடன் தற்பொழுது 48 நாடுகளின் 149 நகரங்களுக்கான விமான சேவையையும் இலட்சக்கணக்காண பயணிகளுக்கான சொகுசு சேவைகள் உட்பட பயணிப்பதற்கான வசதி வாய்ப்புகளையும் வழங்கிவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.