பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்களை எதிர்வரும் சில நாட்களில் கண்டுகொள்ள முடியும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (11) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுமென தெரிவித்த அமைச்சர் சஜித் தனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment