பாறுக் ஷிஹான்
மருதமுனை அல் ஹம்றா வித்தியாலய முன்னாள் அதிபரின் சேவையை பாராட்டி பிரியாவிடை வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (4) இடம்பெற்றது.
மருதமுனை அல் ஹம்ரா வித்தியாலய அதிபர் ஐ.உவைத்துல்லா தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் காலை 10 மணியளவில் நடைபெற்றன.
பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் வாழ்த்து பாடல்கள் வாழ்த்துரைகள் இடம்பெற்று நினைவுச் சின்னங்களும் வழங்கி பொன்னாடை போர்த்தி முன்னாள் அதிபர் ஏ.குனுகதுல்லாஹ் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் அப்துல் ஜலீல் ,கல்முனை வலயக்கல்வி பணிமனையின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மருதமுனை அல் ஹம்ரா வித்தியாலய அதிபர் ஐ.உவைத்துல்லா தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் காலை 10 மணியளவில் நடைபெற்றன.
பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் வாழ்த்து பாடல்கள் வாழ்த்துரைகள் இடம்பெற்று நினைவுச் சின்னங்களும் வழங்கி பொன்னாடை போர்த்தி முன்னாள் அதிபர் ஏ.குனுகதுல்லாஹ் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் அப்துல் ஜலீல் ,கல்முனை வலயக்கல்வி பணிமனையின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் அதிபரின் வழிநடத்தலில் கடந்த வருடம் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 9 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment
Post a Comment