மாணவியை துஸ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்




பாறுக் ஷிஹான்

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை   மாணவியை அழைத்து பாலியல் 
துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் 
வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாய்க்கிழமை(3)  உத்தரவிட்டுள்ளது.

 கடந்த  சனிக்கிழமை (31)  அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 
பகுதியில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் 
அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை   கல்முனை
 பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைதானார்.

சந்தேக நபர் அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை
 வாங்கி தருமாறு கோரியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது
 வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.இந்நிலையில்  சந்தேக நபர் அம்மாணவியை 
பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு 
சென்றுள்ளனர.இதன் போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர்  தப்பி  சென்றுள்ளார்.

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு    பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். இதனை அடுத்த தேடிய பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்தனர்.
இதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியைய பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Attachments area