புகையிரதத்தில் சிக்குண்டு பலி




(க.கிஷாந்தன்)
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர்   ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 19.09.2019 அன்று இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தண்டவாளத்தில் நித்திரை கொண்டு இருந்த வேலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்க என்ற புகையிரத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளதாகவும் உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் இவர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பத்தில்  உயிர்ழந்தவரின் சடலத்தை  புகையிரத வீதியினை சீர்செய்பவர்களின் ஊடாக சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை  வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது