கல்முனை உயர் நீதிமன்ற வலய விளையாட்டுப் போட்டி




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
கல்முனை உயர் நீதிமன்ற வலய நீதிமன்ற ஊழியரகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி, கல்முனை வெஸ்லி கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை இடம்பெற்றது.

இப்போட்டியில், கல்முனை,சம்மாந்துறை, அக்கரைப்பற்று,பொத்துவில் நீதிமன்றங்களின் ஊழியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

எல்லே மகளிர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை உயர் நீதிமன்றம் வெறறி பெற்றது. அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றம் வலைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றது

கல்முனை உயர் நீதிமன்ற நீதிபதி சிறிநதி நந்தசேகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில், பொ்த்துவில் நீதிமன்ற நீதிபதி றாபி, அக்கரைப்பற்று நீதிபதி சிவக்குமார், கல்முனை நீதிமன்ற நீதிபதிகள் பயாஸ் றஸ்சாக், நீதிபதி றிஸ்வான், சம்மாந்துறை நீதிபதி றிஸ்வி ஆகியோர் கலந்து சிறபபித்தனர்.