அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் ”உதவிடு உயரந்திடு”


#Basheer Abdul Kaiyoom.
அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் மற்றுமொரு நற்பணியாக அட்டாளைச்சேனையில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(28-12-2019) அட்டாளைச்சேனை ஜும்மாஆப்பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சுக்களின் செயலாளர் U.L.M.Azeez,
பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ A.L.M.Nazeer, மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ Al.Hafil N.M.Abdullah, மூதூர்- மாவட்ட நீதிமன்ற நீதிபதி கெளரவ M.S.Samsudeen,தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயேக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் A.Jawfer,
உட்பட மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கல்வி உயரதிகாரிகள், வர்த்தக சங்கத்தின் அங்கத்தினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.