வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது


சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த 15ஆம் திகதி சாய்ந்தமருதினை தனியான நகர சபையாக அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த 15ஆம் திகதி சாய்ந்தமருதினை தனியான நகர சபையாக அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது