தமிழ் அரசியல் கைதி விடயத்திலும் கரிசனை செலுத்த வேண்டும்


பாறுக் ஷிஹான்

மரண தண்டனை விதிக்கப்பட்ட மேஜர் சுனில் ரத்னாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் ஆனந்த சுதாகரன் உட்பட ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது எனவும் ஜனாதிபதி
தமிழ் அரசியல் கைதி விடயத்திலும் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மேஜர் சுனில் ரத்னாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்களான அந்தோனி சுதர்ஷன் மற்றும் நாகேந்திரன் தர்ஷினி இவ்வாறு தத்தமது கருத்தினை தெரிவித்தனர்

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட ராணுவ மேஜருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியுமானால் எந்தவித விசாரணையுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் கைதிகளுக்கு விடுதலை அளிக்க முடியாது. நீண்ட காலமாக எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.

சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி அல்ல இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் ஜனாதிபதி என்ற அடிப்படையில் செயலபட வேண்டும்.

உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் நிலையில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் ஜனாதிபதி கரிசணை எடுக்க வேண்டும்.தாய் தந்தைகள் சிறையில் வாடும் போது பிள்ளைகள் இந்த நோய் மத்தியில் பல அவஸ்தைக்கு உள்ளாகின்றனர் அவர்களது பொருளாதாரம் குறித்த விடயங்களும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனைவியை இழந்து நிற்கும் ஆனந்த சுதாகரன் உட்பட இனி அரசியல்வாதிகளின் குடும்ப நிலையும் இதே நிலைதான் அவர்களது பிள்ளைகளை பராமரிப்பதற்கு யாருமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ராணுவ மேஜர் சுனில் ரத்நாயக்க அவர்களின் பிள்ளைகள் கூட இதே நிலையில்தான் தந்தையின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். இதே நிலையில் தான் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களிலும் இருக்கின்றது நிறைந்த ஜனாதிபதி அவசரகால நிலையை கருத்தில கொண்டும்
நீண்ட காலமாக விசாரணையில் இருக்கும் அரசியல் கைதிகள் உட்பட ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.