அனுமதிப் பத்திரமின்றி பயணம்


(க.கிஷாந்தன்)

 

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இறைச்சிக்காக மூன்று மாடுகளை லொறியொன்றில் ஏற்றிச்சென்ற இருவர் நுவரெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ராகலை மற்றும் நானுஓயா பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நுவரெலியா பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே சோதனை நடத்தப்பட்டு, இக்கைது இடம்பெற்றுள்ளது.

 

குறித்த மாடுகளை ராகலையில் இருந்து தலவாக்கலைக்கு எடுத்துச்சென்று, அங்கு வெட்டி விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட இருவரும் நுவரெலியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.