சம்மாந்துறையில்,இரண்டாம் கட்ட இடர் காலக் கொடுப்பனவு


பாறுக் ஷிஹான்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான  மே மாதத்துக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு   சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர் ,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட  நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு கிராம சேவையாளர்களிடம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவினால்  வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றும் இன்றும் இடம்பெற்ற இந்நிகழ்வில்  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக்,சம்மாந்துறை நிர்வாக கிராம உத்தியோகத்தகர் எம்.எல் தஸ்னீம்,கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர்,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட  நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.