ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் அமளி !


ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் இன்று காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றபோது ,கட்சியின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்  கேள்விகளை எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது.

வரும் தேர்தல் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தின்போதே இவ்வாறு கேள்விகளை எழுப்பிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

எவ்வாறாயினும் திருப்தியான பதில் கிடைக்காததால் விசனமடைந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அங்கிருந்த கட்சியின் முன்னாள் எம் பிக்களை பார்த்து கேள்விகளை எழுப்பினர்.

பின்னர் பெரும் அமளியையடுத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் முரண்பட்டு கட்சித் தலைமையகத்தினை விட்டு வெளியேறினர்.

அங்கு உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது