எழுத்தாளரும், விமர்சகருமான மா.பா.சி.காலமானார்


 


ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான மா.பா.சி.’‘ என அழைக்கப்படும் மா.பாலசிங்கம் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 81.

கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்த நிலையிலிருந்த அவர் இன்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினார்கள். இறுதிக்கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

தினக்குரல் பத்திரிகையில் அவர் தொடர்ச்சியாக எழுதிவந்த கட்டுரைகள் “மா.பா.சி கேட்டவை” என்ற தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. இதனைவிட பல சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார்.