நாட்டின் மொத்த பாதிப்பு பதினொராயிரத்தைக் கடந்துள்ளது


 


நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மட்டும் மொத்தமாக 397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த பாதிப்பு பதினொராயிரத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 41 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனைய 356 பேரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 582ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை நான்காயிரத்து 905 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்