விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும் கூறினார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் நாளை முதல் விடுவிப்பதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆலையடிவேம்பில் விடுவிக்கப்பட்ட பிரிவுகளின் நிலை தொடர்பில் மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க அவர்களை தொடர்பு கொண்டு பேசியதன் பின்னரே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விபரங்கள்; நாளை இடம்பெறவுள்ள பிரதேச மற்றும் மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
ஆகவே அதுவரையில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு எமது பிரதேசத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாடு