தொடரும் கைது வேட்டை; 24 மணி நேரத்திற்குள் 581 பேர் சிக்கினர்.!




 


தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 581 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 61,587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த 1792 நபர்கள் நேற்று (29) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6 மாத சிறைத்தண்டனை நீதிமன்றத்தால் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Kayal