கொரோனா விழிப்புணர்வு பதாகைகள்,திறத்து வைக்கப்பட்டது


 


கொரோனா விழிப்புணர்வு  பதாகைகள் அம்பாறை மாவட்டம் கல்முனையில் இரு வேறு பகுதிகளில்  திறத்து வைக்கப்பட்டது .


 கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை பகுதியில் பொதுமக்களுக்கு  கொரோனா தொற்று நோய்  தொடர்பில் விழிப்பூட்டும் வகையில் கல்முனை கொரோனா தடுப்புசெயலணியின்  ஏற்பாட்டில் கொரோனா தொற்று பற்றிய அறிவுறுத்தல்   அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் இன்று (27) திறந்து வைக்கப்பட்டன.

இவ்விழிப்புணர்வு பதாகைகள் கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்றலில் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  அருகாமையில்   திறந்து வைக்கப்பட்டன.

இதன் போது கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் , கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி , கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை வைத்தியசாலை அத்தியட்சகர் ஏ. எல். எப். ரகுமான்,  241வது இராணுவப்பிரிவின் கட்டளை அதிகாரி ,கல்முனைப் பிராந்திய இராணுவ  மேஜர் சாந்த விஜேயகோன், வைத்தியர்களான ஏ. எல். பாறுக் , ஜெசிலுல் இலாஹி, கல்முனை தெற்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  ஏ. எம். பாறுக்,  உட்பட கல்முனை கொரோனா தடுப்புசெயலனி உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும்  கலந்து கொண்டனர்.