சமுர்த்தி சௌபாக்கியா வார தேசிய வேலைத்திட்டத்தின் இறுதி நாள்



வி.சுகிர்தகுமார் 0777113659
  

சமுர்த்தி சௌபாக்கியா வார தேசிய வேலைத்திட்டத்தின் இறுதி நாளான இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வீடமைப்பிற்கான அடிக்கல் நடப்பட்டதுடன் சமுர்த்தி லொத்தர் காசோலை வழங்கப்பட்டது.

இம்மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதி சமுர்த்தி சௌபாக்கியா வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிகிராமம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று 7ஃ4 பிரிவுகளில் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையின் கீழ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக இன்று உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மேற்பார்வையில் சமுர்த்தி பயனாளி ஒருவருக்கான சமுர்த்தி லொத்தர் காசோலை வழங்கப்பட்டதுடன் கண்ணகிகிராமம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று 7ஃ4; பிரிவுகளில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில்; முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன்  ; கருத்திட்ட முகாமையாளர் ஆர்.மதியழகன் ஆலையடிவேம்பு வடக்கு வங்கியின் முகாமையாளர் எஸ்.சுரேஸ்குமார் சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா