ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? தளர்த்துவதா.? நாளை இறுதி தீர்மானம்..!


 


நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை திங்கட்கிழமைக்கு பின்னர் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? குறித்து நாளை அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை கூடவுள்ள கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே, இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை, தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 63 331 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Kayal