இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி, சீனி


 


அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கான உயர்ந்த பட்ச சில்லரை விலை இன்று நிர்ணயிக்கப்படும் என்று சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

'சதொச' மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக ஒரு கிலோ சீனியை 130 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் சீனியை கட்டுப்பாட்டு விலையில் பொது மக்களுக்கு விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

- Kayal