காணாமல் போன உறவுகளுக்கு தீர்வு ஐநாவில் தீர்வு கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம்



 


பாறுக் ஷிஹான்


காணாமல் போன உறவுகளுக்கு தீர்வு ஐநாவில் தீர்வு கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம்  என  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க செயலாளர் தேவசகாயம் ரஞ்சனா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

எமது உறவுகளை தேடி 11 வருடங்களாக போராடி கொண்டு இருக்கின்றோம்.இந்நிலையில் எங்கள் நாட்டு ஜனாதிபதி எமது காணாமல் போன உறவுகளுக்கு 1 இலட்சம் ரூபா வழங்கவுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.இந்த 1 இலட்சம் ரூபா தான் எமது உறவுகளின் உயிரின் மதிப்பு என கேட்க விரும்புகின்றேன்.இதனை 8 மாவட்டத்திலும் இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் சார்பில் கண்டிக்கின்றோம்.அத்துடன் எமக்கான தீர்வு ஐநாவில் தீர்வு கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம்  என்றார்.