கதைக் கோபுரம் சிவலிங்கம் மாஸ்டர் மறைவு




 


கடந்த  பல தசாப்தங்களாக வானொலி, தொலைக்காட்சிகளில் கதை சொல்லி மகிழ்வித்த சிவலிங்கம் மாஸ்டர் மறைவு.

துயர் கேட்ட நேரம். மாஸ்டர் சிவலிங்கம் ஐயா எமை  விட்டு பிரிந்துவிட்டார். மட்டுநகரின் கதைக் கோபுரம் சரிந்துவிட்டது.


 சிறு வயதில் அவர் அருகில் அமர்ந்து கதை கேட்ட ஞாபகங்கள் இன்னும் கண்முன்னே. புராணக் கதைகளாலும் நீதிக்கதைகளாலும் எமை செதுக்கிய சிற்பி. 

கதைகளில் குதிரைகள் ஓடும் சத்தங்களை வேக ஓட்டத்திற்கு ஏற்ப புத்தக அட்டையில் அவர் விரல்களால் இசைத்து காட்டுவது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஐயா!! போய் வாருங்கள் எங்கள் சந்ததிகள் உங்களிடம் கதை கேட்க காத்திருக்கின்றனர்.😢