நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை




 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின் இன்றைய உரையில் முக்கிய தீர்மானங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.