காஞ்சிரங்குடாவில், உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு விளக்கமறியல்


 


அக்கரைப்பற்று-- திருக்கோவில் காஞ்சிங்குடா வீதிக்கு அண்மையில், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 41 வயது செந்தூரன் என்பவர் உயிரிழந்தார்.

குறித்த வாகனச் சாரதி, சாரதி அனுமதிப் பத்திரம் அற்றவர் என்பதுடன், இழுவைப் பெட்டியில் உரிய  பாதுகாப்பு, பிடி பலகை இன்மையினால் பெட்டி புரண்டு அதிலுள்ள இரும்புக் கம்பி மார்பில் பாய்ந்ததால், குறித்த  உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் நின்று பயணம் செய்தவரே இவ்வாறு உயிரிழந்தார்.

.இதேவேளை, இந்த விபத்து சாரதியின் கவனயீனத்தினாலும், நிகழ்ந்தாகவும், விசாரணைகள் தொடர்ந்ததும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், திருக்கோவில் பொலிசார் இன்று அக்கரைப்பற்று நீதிமன்றில்  சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்திய வேளையில்,  தெரிவித்திருந்தனர். 

குறித்த சந்தேக நபரை இம்மாதம் 16ந் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு அக்கரைப்பற்று  மேலதிக  கெளரவ  நீதவான் KLM சாஜித். உத்தரவிட்டார்.