ஆலையடிவேம்பு இளைஞன் ஒருவர்,முல்லைத்தீவு நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்பு




 


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்றை 7/4 பிரிவைச்சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து நேற்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.       

                                                                      சடலமாக மீட்க்கப்பட்டவர் குறித்த ஹோட்டலில் பலவருடகாலமாக கடமையாற்றி வந்த குழந்தைவடிவேல் புனிதராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                                                         குறித்த இளைஞன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் வணிகத்துறையில் கல்வி பயின்றவர் என்பதுடன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்ததன் பின்னர் ஹோட்டலில் கடமையாற்றி வந்தவர்  எனவும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.              விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்பவர் எனவும் கூறப்படுகின்றது.

அத்தோடு மிகவும் சாதூர்யமான பக்குவமிக்க பண்பான ஒருவர் எனவும் அவரது நண்பர்கள் மூலம் அறிய கிடைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞனை காணவில்லை என முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 04ஆம் திகதி பதிவு செய்யப்பட்டதை அடுத்து நேற்று (05) காலை  ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக அவர் மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட அவரது குடும்பத்தினர் நேற்று முல்லைத்தீவு சென்றடைந்துள்ளதுடன் நேற்றுமுதல் மரண விசாரணைகள் முல்லைத்தீவு பொலிசாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இச்சம்பவத்தினால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.