பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வு மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு!



 


கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படவிருந்த

பட்டதாரி ஆசிரியர்களுக்கான
நேர்முகத் தேர்வு தவிர்க்க முடியாத காரணத்தினால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரத்தினம் தெரிவித்துள்ளார்.

நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.