Breaking News நீதிமன்ற பதிவேட்டறைக்கு தீ வைத்த சந்தேக நபர்களுக்கு 7 நாள் தடுப்புக் காவல்


 

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செ
ய்யப்பட்ட,
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதிவேட்டறைக்கு தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 3 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க- அக்கரைப்பற்று நீதிமன்றின் பதில் நீதவான் கே.சமீம் உத்தரவு பிறப்பித்தார்.


(முந்தைய செய்தி)

 தீ வைத்தமை தொடர்பில் மூன்று பேர் நேற்று கைது.!!

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கோளாவில் பகுதியைச் சேர்ந்த யாழ் ஆவா குழுவுடன் இயங்கி வந்த,

24 வயதுடைய ஒருவர் உட்பட 3 இளைஞர்களை ஹெரோயின் போதைப்பொருளுடன் புதன்கிழமை (டிச.28) நீலாவணை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை நீதிமன்ற கட்டிடத்திற்கு இனம்தெரியாதேரால் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுதுவந்தனர்.

இதன்போது நீதிமன்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கெமரா மூலம் நீதின்ற கட்டித்திற்கு முகமூடி அணிந்தவாறு,

3 பேர் நீதிமன்ற பகுதிக்குள் உள்நுழைந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையில் நீலாவணை பகுதில் பதுங்கிருந்த அக்கரைப்பற்று கோளாவில் பகுதியைச் சேர்ந்த 24, 20, 17 வயதுடைய மூன்று பேரை சம்பவதினமான நேற்று  புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 24 வயதுடையவருக்கு 9 நீதிமன்ற பிடிவிறாந்து உள்ளதுடன் இவர் யாழ் ஆவா குறுப்புடன் அங்கிருந்து செயற்பட்டு வந்துள்ளதாகவும்,

அவரின் நண்பர்களான 20, 17 வயதுடைய அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்தவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணை
களை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.