கடந்தகால சூனிய அரசியல் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது



 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  கடந்தகால சூனிய அரசியல் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என தெரிவித்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான கே.என். டக்ளஸ் தேவானந்தா அதில் இருந்து மக்களை மீட்டெடுத்து சுயமாக கௌரவமாக வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எனது நோக்கம் எனவும் கூறினார்.
அம்பாரை மாவட்டத்தில் கடற்றொழில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு மாவட்டத்திற்கான விஜயமொன்றை நேற்று (08) மேற்கொண்ட அவர் தம்பிலுவில் கனகரெட்ணம் கட்டடத்தில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் நேற்று மாலை கலந்து கொண்டார்.
அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மக்கள் சந்திப்பு நிகழ்வானது விவசாய போதனாசிரியரும் ஈழமக்கள் ஜனநாயககட்சியின் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் திரு.மு.கங்காதரன்; ஏற்பாட்டில்; இடம்பெற்றது....
நிகழ்வில் கலந்து கொண்ட மக்களினால் அமைச்சரிடன் மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன் பொது விடயங்கள் பற்றிய கலந்துரையாடலும் கட்சியின் எதிர்கால பயணம் நிகழ்வு வேலைதிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது...
சந்திப்பில்; திருக்கோவில் பிரதேச இந்து மாமன்ற தலைவரும் ஸ்ரீP சித்திரவேலாயுதசுவாமி ஆலய வண்ணக்கருமான திரு.எ.ஜயந்தன் திரு,மு.கங்காதரன் கட்சியின் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் திருக்கோவில் பிரதேச ஆலயங்களின் நிருவாகத்தினர் சமுக சேவையாளர்கள் விவசாய சங்க உறுப்பினர்கள்  பொது மக்கள் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்