"வாழ்வில் வசந்தம்"




 


நூருல் ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "வாழ்வில் வசந்தம்"  வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பகுதி அளவான 9 வது வீடு கையளிக்கும் நிகழ்வு (22) பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில்இடம்பெற்றது

நிந்தவூர் - 23 ம் பிரிவு அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின்  இணைப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் ஏ எச் மின்ஹாஜ் (முப்தி) கலந்து கொண்டு பயனாளியிடம் குறித்த வீட்டை கையளித்தது வைத்தார்

நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் பங்களிப்புடன் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில்  இருந்து தெரிவுசெய்யப்பட்ட தேவையுடைய பயனாளி ஒருவருக்கே இந்த பகுதி அளவான வீடு  பூர்த்தி செய்து  வழங்கி வைக்கப்பட்டது. வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்பட்ட ஒரு  குடும்பத்தின்  கண்ணீர் கதையை இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு,  மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் பங்களிப்புடன்  துடைத்து வைக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

இந்த நிகழ்வில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, ஏசியன் வலையமைப்பின் பிரதானி சாஜித் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்