சிரமதானம்





 நூருல் ஹுதா உமர்


கல்முனை  மாநகர ஆணையாளர்  ஏ.எல்.எம். அஸ்மி அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள மாநகரை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு அமைய முதல்  கட்டமாக கல்முனை பொது மயானம் சனிக்கிழமை சிரமதானம் செய்து துப்புரவு  செய்யப்பட்டது.

மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமையை கல்முனை மாநகர  சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் யு.எம். இஸ்ஹாக் தலைமையில் மேற்பார்வை உத்தியோகத்தர்களான ஏ.எம்.அதுகம், எஸ்.விக்கினேஸ்வரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்த  சிரமதானப்பணி  கல்முனை  மாநகர  சபை  ஊழியர்களின்  பங்களிப்புடன் நடைபெற்றது.

நகரை  தூய்மைப்படுத்தும் மாநகர ஆணையாளரின் திட்டத்தில் முதல் நிகழ்வாக மயானத்தை தெரிவு  செய்தமைக்கு பிரதேச வாசிகள் பாராட்டு தெரிவித்தனர்.