கடைமைறே்பு





 கிழக்கு மாகாணத்தின் முதல் தமிழ் ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலையில் பதவியேற்றார்.


அமைச்சர் ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கிழக்கு மாகாண தலைமைச் செயலாளர் மற்றும் செயலாளர்கள் உயரதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
புதிய ஆளுநருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஆளுநர் பணிமனையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஆளுநர் பதிவேட்டில் ஒப்பமிட்டதும் பலரும் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அரசியல் பேதமின்றி 
நூற்றுக்கணக்கான பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.