நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி குழப்பும் வகையில் செயற்பட்டவருக்கு 6 மாத கடூழிய சிறை





 அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் வகையில் கூச்சலிட்டு, சத்தமிட்டு, அநாகரிகமாகச் செ செயற்பட்டவருக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனையும் ரூபா 1500.00 அபராதமும் அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நீதிபதி ஹம்சா அவர்களினால் விதிக்கப்பட்டது.

நேற்று வியாழக் கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றது.

குறித்த குற்றவாளி ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பகுதியினைச் சேர்ந்தவர்.