தகவல்: அஸ்மி ஏறாவூர்
தன்னாமுனை விபத்து; காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் வபாத்; 3 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடியை சேர்ந்த EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டியே விபத்தில் சிக்கி உள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி - சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்: அஸ்மி ஏறாவூர்
Post a Comment
Post a Comment