பொங்கல் விழா!






( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த தைப்பொங்கல் விழா நேற்று(16) வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..

முன்னதாக மாட்டு வண்டி சகிதம் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
அதிதிகளாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் கோ.வசந்தராஜா அம்பாறை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் திருமதி புவிராஜினி விஷ்ணுரூபன் 
 உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா , கல்முனை ஹற்றன் நாஷனல் வங்கி முகாமையாளர் ஏ. நிர்மலகுமார் பற்றியா 125 வது ஆணாடுவிழாக்குழு பொருளாளர் எஸ்.சிறிரங்கன் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்யாலயா அதிபர் ரிசாட் மற்றும் மாணவர்களும், சிங்கள மகா வித்தியாலய அதிபர் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
-

அங்கு பற்றிமா பழையமாணவர்களானவைத்திய கலாநிதி டாக்டர் வசந்தராஜா பொறியியலாளர் புவிராஜினி ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டாரர்கள்.