கற்றல் உபகரணங்களும் வழங்கிவைப்பு



 



( வி.ரி. சகாதேவராஜா)


 அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும்,, பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனத்தையும் வழங்கி வைத்தது.

"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) வேண்டுகோளுக்கமைவாக, "ஒஸ்கார்" அமைப்பின் போசகரும் உலகறிந்த பிரபல சமூக செயற்பாட்டாளருமான நாகமணி குணரெத்தினம் இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி நல்கினார்.

இந்நிகழ்வு , மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  நேற்று  ( 09) வியாழக்கிழமை அதிபர் எஸ்.கிருபைராஜா தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக,  ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக இலங்கை வங்கியின் ஓய்வு நிலை முகாமையாளர் இ.தவராஜா கலந்து சிறப்பித்தார் 

 ஒஸ்கார் சார்பில்  உ. சஜானந்த்   ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை பை உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

மேலும் பாடசாலையின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த ஒலிபெருக்கி சாதனத்தையும் ஒஸ்கார் அமைப்பு வழங்கி வைத்தது.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளரும் பொருளாளருமான வீரக்குட்டி விவேகானந்தமூர்த்தி  அவுஸ்திரேலியாவிலிருந்து  ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் 

 ஒஸ்கார்  அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) தலைமையிலான செயலாளர் தி.லாவண்யன், பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தி உள்ளிட்ட ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல  சேவைகளை கடந்த பல வருடங்களாக செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.