யாழில் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் உயிரிழப்பு..!



 


துயரம்.
தீயில் எரிந்த உதவிப்பிரதேச செயலாளர் பலி
சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராகப் பணி புரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவிப்பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம்பெற்றது.
இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கையறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார்.
சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச்சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவிப்பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தையொன்றும் உள்ளது கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. (யாழில் 
சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் உயிரிழப்பு..!

ஆழ்ந்த இரங்கல்கள்..😥😥