வி.சுகிர்தகுமார்
வடகிழக்கில் தமிழ் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்ட எந்தக்கட்சியை வேண்டுமானாலும் தமிழ் மக்கள் ஆதரிக்கலாம் க.கோடீஸ்வரன்
எங்களது ஆளுகைக்குள் வருகின்ற சபைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என ஜனாதிபதி; பேசியது மனவேதனை அளித்துள்ளது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று(19) மாலை அக்கரைப்பற்று சாகாம வீதியின் அருகாமை நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் ஆர்.சாணக்கியன் இ.ஸ்ரீநாத் மற்றும் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர் க.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தொண்டர்கள் வேட்பாளர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.
பின்னராக மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்குமான ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வரவேற்பு நடனமும் தலைமையுரையும் இடம்பெற்றதுடன் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது எந்த பெரும்பான்மை கட்சிகளோ பேசியதுண்டா என கேள்வி எழுப்பினார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் அரசுக்கட்சியே குரல் கொடுத்து வருகின்றது என்றார்.
வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழ் மக்களின் ஒற்றுமையினை குழப்பியவர்கள் தேசிய மக்கள் சக்தியினரே. வடகிழக்கில் தமிழ் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்ட எந்தக்கட்சியை வேண்டுமானாலும் தமிழ் மக்கள் ஆதரிக்கலாம். ஆனால் சிங்கள பெரும்பான்மை கட்சிகளை ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு செயற்படுவது வரலாற்றுத்துரோகமாக அமையும் என்றார்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் சிறப்பாக அமையும் என மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனாலும் அனைத்தும் வாய்ப்பேச்சில் மாத்திரம் உள்ளது. இனவாதம் மதவாதம் பேசக்கூடாது என கூறிய அந்த தலைவர் எங்களது ஆளுகைக்குள் வருகின்ற சபைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என அன்மையில் பேசியது மனவேதனை அளித்துள்ளது என்றார்.
எங்களது ஆளுகைக்குள் வருகின்ற சபைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என ஜனாதிபதி; பேசியது மனவேதனை அளித்துள்ளது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று(19) மாலை அக்கரைப்பற்று சாகாம வீதியின் அருகாமை நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் ஆர்.சாணக்கியன் இ.ஸ்ரீநாத் மற்றும் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர் க.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தொண்டர்கள் வேட்பாளர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.
பின்னராக மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்குமான ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வரவேற்பு நடனமும் தலைமையுரையும் இடம்பெற்றதுடன் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது எந்த பெரும்பான்மை கட்சிகளோ பேசியதுண்டா என கேள்வி எழுப்பினார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் அரசுக்கட்சியே குரல் கொடுத்து வருகின்றது என்றார்.
வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழ் மக்களின் ஒற்றுமையினை குழப்பியவர்கள் தேசிய மக்கள் சக்தியினரே. வடகிழக்கில் தமிழ் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்ட எந்தக்கட்சியை வேண்டுமானாலும் தமிழ் மக்கள் ஆதரிக்கலாம். ஆனால் சிங்கள பெரும்பான்மை கட்சிகளை ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு செயற்படுவது வரலாற்றுத்துரோகமாக அமையும் என்றார்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் சிறப்பாக அமையும் என மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனாலும் அனைத்தும் வாய்ப்பேச்சில் மாத்திரம் உள்ளது. இனவாதம் மதவாதம் பேசக்கூடாது என கூறிய அந்த தலைவர் எங்களது ஆளுகைக்குள் வருகின்ற சபைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என அன்மையில் பேசியது மனவேதனை அளித்துள்ளது என்றார்.
Post a Comment
Post a Comment