கொழும்பில் பல பகுதிகளில் மினி சூறாவளி வீசி, பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக கொழும்பு-காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரைக்கும், கிரேண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது. கிரேண்ட்பாஸ் புனித ஜோசப் வீதியில் பெரிய அளவிலான மரம் ஒன்று விழுந்ததால், அருகில் இருந்த 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment