கதிர்காமத்திலிருந்து கிரானை நோக்கி



 ( வி.ரி. சகாதேவராஜா)

கதிர்காமத்தில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது வீதியை விட்டு விலகி  வீதியின் அருகே நின்ற மரத்தில்  மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.10 மணியளவில். கிரான்குளம் பகுதியில் வைத்து இடம்பெற்றது. 

 விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்..