காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு



 


பாறுக் ஷிஹான்

 
அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர்  பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5  ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ முகாம்  காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம்  வெள்ளிக்கிழமை (10) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
   
கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன.

இதே வேளை இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில் தனியார் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.அதனை பொறுப்பேற்பதற்காக இது தொடர்பான உத்தியோகப்பூர்வ நிகழ்வில்  காரைதீவு  பிரதேச செயலாளர் ஜி.அருணனிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது


முகாம் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


இவ் முகாமை அகற்றி பிரதேச சபை  பொது நூலக  கட்டிடத்தை மீள ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில்    முதற் கட்டமாக இவ் இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதுடன்  இம் மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள மேலும் ஒரு சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது காரைதீவில் நிலை கொண்டிருந்த     இராணுவத்தினர் கல்முனை முகாம் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.