ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவருடைய மனைவியின் இல்லம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் இதன் பின்னணியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.


Post a Comment
Post a Comment