சாளம்பைக்கேணி கிராம 35 குடும்பங்களுக்கு, ரம்ழான் பொதிகள்



 (வி.ரி.சகாதேவராஜா)


நாவிதன்வெளி மத்தியமுகாம் சாளம்பைக்கேணி முஸ்லிம்களுக்கு ரமழான் பொதிகளை  நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு.புவனரூபன் தனது எட்டாவது மாத கொடுப்பனவை ரமழான் நோன்பு பொதிகளாக நேற்று வழங்கி வைத்தார்.

 தற்போது நோன்பு காலம் என்பதால் நாவிதன்வெளி  சாளம்பைக்கேணி  கிராமத்திலே தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும்  35 குடும்பங்களுக்கு  இவை வழங்கி வைக்கப்பட்டது.
அவர் தனது கடந்த ஏழு மாத மாதாந்த கொடுப்பனவுகளை ஏழை மக்களுக்காகவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய எட்டாவது மாதக் கொடுப்பனவை இவ்வாறு வழங்கப்பட்டது.

உபதவிசாளர்  கு.புவனரூபன் கூறுகையில்;
 கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் எனக்கு 2465 வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளில் 63 வாக்குகள் முஸ்லிம்களால் அளிக்கப்பட்டவை. ஆதலால் ரமழான் நோன்பு காலத்திலே அவர்களுக்கும் எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இதனை வழங்குகிறேன் என்றார்.