(Updated)
மட்டக்களப்பில் கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன
பெண்களின் தங்க தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த குழுவுடன்; தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய அவர் முச்சக்கர வண்டி சாரதியாவார்.
அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
அவர் வழங்கிய தகவலின்படி, அவரின் இரண்டரை வயது மகள் வயல் பகுதியில் தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
அத்துடன், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர், குறித்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வவுணதீவு காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பி; மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரண்டு நகையக உரிமையாளர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் கொள்ளைக் குழுவிடம் இருந்து, இரண்டு முச்சக்கர வண்டிகளும் கார் ஒன்றும், கோடரி உட்பட்ட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
அதேநேரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளன.
- பயணிக்கும் பெண்கள் இலக்கு: சந்தேகநபர்கள் தனியாகப் பயணிக்கும் பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று இந்த கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.
- மயக்க மருந்து கொடுத்தல்: பயணத்தின்போது, பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் அல்லது உணவை வழங்கி அவர்களை மயக்கமடையச் செய்துள்ளனர்.
- தங்க ஆபரணங்கள் கொள்ளை: மயக்கமடைந்த பெண்களின் தாலிச் சங்கிலி (சுமார் 5 பவுண் வரை), தங்கச் சங்கிலிகள் மற்றும் இதர நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
- கிணற்றில் வீசுதல்: கொள்ளையடித்த பின்னர், சாட்சிகளை மறைப்பதற்காக மயக்க நிலையில் உள்ள பெண்களைக் கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்துள்ளனர் அல்லது கொல்ல முயன்றுள்ளனர்.
- குழந்தை கடத்தல்: ஒரு சம்பவத்தில், தாயை மயக்கமடையச் செய்து நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபர்கள், அவருடன் இருந்த 3 வயது குழந்தையை வவுணதீவு பகுதியில் உள்ள வயல்வெளியில் வீசிச் சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
- 5 பேர் கைது: இச்சம்பவங்கள் தொடர்பில் 22, 34 வயதுடைய இரு ஆண்கள் மற்றும் 26 வயதுடைய பெண் ஒருவர் உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சந்தேகநபர்கள் பின்னணி: கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வைத்திருந்த மற்றும் விற்க உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கைப்பற்றப்பட்ட நகைகள்: கொள்ளையர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- விசாரணை: கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவற்காடு, மட்டக்களப்பு மற்றும் காஞ்சனகுடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- கொலை: களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் பெப்ரவரி 28 அன்று வங்கி மற்றும் வைத்தியசாலைக்குச் சென்று திரும்பும்போது காணாமல் போய், பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- காயமடைந்தவர்: மார்ச் 19 அன்று, மற்றொரு பெண் குழந்தையுடன் கடத்தப்பட்டு, மருந்து கொடுக்கப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிர் பிழைத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.jpg)

Post a Comment
Post a Comment