வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல் – நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு
நூருல் ஹுதா உமர்
வரிப்பத்தான்சேனை பகுதியில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச சபையின் நுழைவாயிலாக விளங்கும் பெரியபாலம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒளியூட்டல் குறைபாடு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சின் “நகரங்களை அழகுபடுத்தல்” திட்டத்தின் கீழ் இந்த ஒளியூட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சபை தலைவர் கௌரவ எம்.எல்.எம். முஸ்மி அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் உதவி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான என்.எம். ஆஷீக் மற்றும் உறுப்பினர் ஏ.ஜி.எம். சாக்கீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவி செய்த உதவி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வரிப்பத்தான்சேனை பிரதேச மக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், பகுதியின் அழகும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment