தடல்ல பகுதியில் தடாலடியாக மோதியது,பேரூந்து



 


காலி - கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.


ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்தை சந்தித்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்தினுள் சுமார் 20 பயணிகள் வரை இருந்துள்ளனர்.



பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, பேருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் பேருந்து பாதையை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் பலமாக மோதியுள்ளது. இந்த அதிவேக மோதலினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.