(எம்.என்.எம்.அப்ராஸ்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு "டெங்கற்ற கிழக்கு - பாதுகாப்பான சமூகத்தை நோக்கி "எனும் தொனிப் பொருளில் கட்சியின் இளைஞர் காங்கிரசின் ஏற்ப்பாட்டில் கல்முனையில் நேற்று (11)இடம் பெற்றது.
“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில், 2026 ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 09 வரை கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நல செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.
இதில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரிகளின் பங்களிப்புடன் டெங்கு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சுகாதாரம்,மக்கள் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,தேசிய பொருளாளரும், உயர்பீட உறுப்பினர்களும்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும், கல்முனை பிராந்திய சுகாதார அதிகாரிகளும், பிரதேச அமைப்பாளர்களும்,இளைஞர் அமைப்பாளர்களும், கட்சியின் முக்கியஸ்தர்களும் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment